tamilnadu

img

இந்தியாவின் 2019-20 நிதியாண்டுக்கான ஜிடிபி 4.9 சதவீதம் - மூடிஸ் நிறுவனம் கணிப்பு

2019-20 நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி, 4.9 சதவிகிதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது.

இந்தியப் பொருளாதாரம் கடந்த ஒரு வருட காலமாக பலத்த அடி வாங்கிக் கொண்டு இருக்கிறது. கடந்த இரண்டு காலாண்டாக (ஜூன் 2019 மற்றும் செப்டம்பர் 2019), இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி, முறையே 5 சதவிகிதம் மற்றும் 4.5 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டிருக்கிறது. இந்நிலையில், 2019 - 20 முழு நிதியாண்டுக்கான இந்தியாவின் ஜிடிபி, 4.9 சதவிகிதமாக இருக்கும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. முன்னதாக 2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 5.8 சதவிகிதமாக வளரலாம் என கணித்திருந்த மூடிஸ் நிறுவனம், இப்போது 4.9 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி காணும் என அதன் கணிப்பைக் குறைத்து இருக்கிறது.

இந்தியர்களின் நுகர்வு சரிவு தான், இதற்கு முக்கிய காரணம் என மூடிஸ் நிறுவனம் சுட்டிக் காட்டி உள்ளது. அதோடு, இந்தியப் பொருளாதாரம் கடந்த இரண்டு காலாண்டாக நல்ல வளர்ச்சி காணாததால், இந்திய வங்கிகள் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக எச்சரித்து இருக்கிறது. இந்தியப் பொருளாதார வளர்ச்சி சரிவு காரணமாக, மக்களின் கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் குறையலாம் என்றும், இதனால் சில்லறை கடனின் தரம் குறையலாம் என்றும் மூடிஸ் நிறுவனம் எச்சரித்துள்ளது. மேலும், கிராம புறங்களில் நிலவும் நிதி நெருக்கடி, வேலையின்மை போன்றவைகள், இந்திய பொருளாதார மந்த நிலையை தூக்கிப் பிடித்துக் கொண்டிருப்பதாக மூடிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.